கோவை: சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆத்மா அறக்கட்டளை மற்றும் சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து செய்தித்தாள் மற்றும் பேனாக்களை கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
கோவை: சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆத்மா அறக்கட்டளை மற்றும் சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து செய்தித்தாள் மற்றும் பேனாக்களை கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
வாகன ஓட்டிகளில் சிலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை இயக்கி விபத்தை விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் விபத்தில் சிக்கியவர் உட்பட அவரை சார்ந்த பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை விதிகளை மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் போடாமல்,
வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
ஆனால், வழக்கம்போல சாலை விதிகளை மதிக்காதவர்கள் திருந்தியபாடு இல்லை.
ஆகவே, சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்கு செய்தித்தாள், பேனா போன்ற பரிசுகளை சிங்காநல்லூர் போக்குவரத்து போலீசாரும், ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.

இன்று சிங்காநல்லூர் சிக்னல் அருகே சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வரும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினர்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாகன ஓட்டிகளில் சிலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை இயக்கி விபத்தை விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் விபத்தில் சிக்கியவர் உட்பட அவரை சார்ந்த பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை விதிகளை மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் போடாமல்,
வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
ஆனால், வழக்கம்போல சாலை விதிகளை மதிக்காதவர்கள் திருந்தியபாடு இல்லை.
ஆகவே, சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்கு செய்தித்தாள், பேனா போன்ற பரிசுகளை சிங்காநல்லூர் போக்குவரத்து போலீசாரும், ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.

இன்று சிங்காநல்லூர் சிக்னல் அருகே சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வரும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினர்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.