சென்னை : வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி பாலியல் புகார் அளித்த கோவை வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி பாலியல் புகார் அளித்த கோவை வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணன் மீது கோவை மாவட்ட வன அலுவலரிடம் பெண் ஒருவர் கடந்த ஜுலை 23-ம் தேதி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, அவர் வேலூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக விஷாகா கமிட்டி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி வனஅதிகாரி கண்ணன் மீது பாலியல் புகார் அளித்த வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி லதா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததை, சாதகமாகப் பயன்படுத்தி அதிகாரிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க தொலைதூரப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட வன அதிகாரி கண்ணன், வன ஊழியர்களின் சங்கத்தின் மூலம் விஷாகா கமிட்டியின் விசாரணையில் குறுக்கிட முயற்சிப்பதாகவும், தனது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதனைக் கேட்ட நீதிபதி, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.