திருப்பூர்: திருப்பூரில் காதல் திருமணம் தொடர்பாக வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கிய 10 பேரை போலிசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் காதல் திருமணம் தொடர்பாக வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கிய 10 பேரை போலிசார் கைது செய்தனர்.
திருப்பூர் வீரபாண்டியை அடுத்த நொச்சிபாளையம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்பவரும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மோனிஷா என்பவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் போதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதனையறிந்த இருதரப்பினரும் நேற்று மாலை நொச்சிபாளையம் பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து விலக்கி விட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இருதரப்பினரும், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலும் சில போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரூபன்த், ரனாதிக் சக்மா, லோகி குமார், சோவிந், நபி, சந்திப், ஜயோ சக்மா, அன்டிம், சதன், பினுபரன் ஆகிய 10 பேரை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் வீரபாண்டியை அடுத்த நொச்சிபாளையம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்பவரும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மோனிஷா என்பவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் போதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதனையறிந்த இருதரப்பினரும் நேற்று மாலை நொச்சிபாளையம் பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து விலக்கி விட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இருதரப்பினரும், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலும் சில போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரூபன்த், ரனாதிக் சக்மா, லோகி குமார், சோவிந், நபி, சந்திப், ஜயோ சக்மா, அன்டிம், சதன், பினுபரன் ஆகிய 10 பேரை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.