கோவை: கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையிலுள்ள மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றும் அலுவலர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பிரபாகரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜசேகரனிடம் நடத்திய விசாரணையில், அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்து 31 ஆயிரம் ரூபாய் மற்றும் அவரது மேஜையின் கீழே 2,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மற்றொரு அதிகாரியான லெனினிடமிருந்து 14,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.