கோவை : உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
கோவை: உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூபாலகிருஷ்ணன் (37). இவர், நேற்று இரவு தனது காரில் மனைவி அமுதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இயந்திரகோளாறு காரணமாக திடீரென கார் தீப்பிடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத பிஜூபாலகிருஷ்ணன் உடனடியாக காரை நிறுத்தியதுடன், காரிலிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் உடனடியாக இறக்கி விட்டார். அதேநேரத்தில் காரில் பரவிய தீயால் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதையடுத்து, தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.