கோவை : கடந்த மாதம் 20-ம் தேதி பீகார் மாநிலம் சிதாமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி வழியாக துர்கா பூஜை ஊர்வலம் நடைபெற்றது.
கோவை : கடந்த மாதம் 20-ம் தேதி பீகார் மாநிலம் சிதாமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி வழியாக துர்கா பூஜை ஊர்வலம் நடைபெற்றது.

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக ஊர்வலமாகச் சென்ற சங்பரிவார் அமைப்பினர் கலவரம் செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் ஜைனுல் அன்சாரி என்ற முதியவரை கொலை செய்து எரித்தாக கூறி, இதனை கண்டிக்கும் வகையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், பீகாரில் உள்ள அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, முதியவரை எரித்து கொலை செய்தவர்கள் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பா.ஜ.க.,விற்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக ஊர்வலமாகச் சென்ற சங்பரிவார் அமைப்பினர் கலவரம் செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் ஜைனுல் அன்சாரி என்ற முதியவரை கொலை செய்து எரித்தாக கூறி, இதனை கண்டிக்கும் வகையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், பீகாரில் உள்ள அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, முதியவரை எரித்து கொலை செய்தவர்கள் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பா.ஜ.க.,விற்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.