திருப்பூர் : திருப்பூரை அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரை அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால், மழை நீருடன், கழிவு நீரும் தேங்கிய நிலையில் உள்ளதால் இப்பகுதியைச் சுற்றியும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வார காலத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருந்து வகைகளை கூட இங்கு தெளிக்கவோ அல்லது துப்புரவு பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் நகராட்சி முற்றுகை, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால், மழை நீருடன், கழிவு நீரும் தேங்கிய நிலையில் உள்ளதால் இப்பகுதியைச் சுற்றியும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வார காலத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருந்து வகைகளை கூட இங்கு தெளிக்கவோ அல்லது துப்புரவு பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் நகராட்சி முற்றுகை, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.
