நீலகிரி: குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல் 8.33 சதவீதம் போனஸ் வழங்கியுள்ளதாக கூறி தொழிலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
நீலகிரி : குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல் 8.33 சதவீதம் போனஸ் வழங்கியுள்ளதாக கூறி தொழிலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் 20 சதவீதம் வழங்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 8.33 சதவீதம் போனஸ் வழங்கிவருவதாகவும், இந்தாண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் 8.33 சதவீதம் மட்டுமே தோட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாகவும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

மேலும், நிர்வாகத்திற்காக மழை மற்றும் குளிர் என்று பார்க்காமலும், அட்டைப் பூச்சி கடி மற்றும் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கிடையே பணி செய்தும் வரும் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் 20 சதவீதம் வழங்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 8.33 சதவீதம் போனஸ் வழங்கிவருவதாகவும், இந்தாண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் 8.33 சதவீதம் மட்டுமே தோட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாகவும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

மேலும், நிர்வாகத்திற்காக மழை மற்றும் குளிர் என்று பார்க்காமலும், அட்டைப் பூச்சி கடி மற்றும் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கிடையே பணி செய்தும் வரும் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.