மேட்டுப்பாளையம்-ஊட்டி நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்: விபத்துக்கு வழிவகுப்பதாக புகார்

கோவை: மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

கோவை: மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

இரு மாவட்டங்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மேட்டுப்பாளையம்–ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களும் பயணிக்கின்றன.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.



நீலகிரி மலையடிவாரப் பகுதியான கல்லார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் வசிப்போர் பலரும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர்கள் தங்களது வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக காலை நேரத்தில் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இவை மேய்ச்சலுக்குப் பின்னர் மாலை நேரத்திலேயே மீண்டும் திரும்புகின்றன.

அதிகாலை நேரத்திலேயே திறந்து விடப்படும் இம்மாடுகளை மேய்க்க இதன் உரிமையாளர்கள் யாரும் உடன் வராத காரணத்தினால் இவை கட்டுப்பாடு ஏதுமின்றி சாலையிலேயே பெரும்பாலும் சுற்றித்திரிகின்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே ஊர்வலம் போல் வருவதால் வாகனங்கள் கடந்து செல்ல இயலாமல் இடையூறு ஏற்படுகின்றன. 



சாலையின் நடுவே நிற்கும் மாடுகள் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுவதில்லை. மாடுகளின் அருகே சென்று அதிக ஒலியில் ஹாரன் அடித்தால் கூட இவை பயப்படாமல் மிக மெதுவாகவே நகர்கின்றன. பல நேரங்களில் சாலையோரத்தில் இருந்து இவை தீடீரென கூட்டமாகச் சாலையின் நடுவே வந்து விடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...