கோவையில் தேசிய ஃபவுண்டரி மாநாடு வரும் 16-ம் தேதி தொடக்கம்

கோவை : தேசிய ஃபவுண்டரி மாநாடு வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது.



கோவை : தேசிய ஃபவுண்டரி மாநாடு வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது. 

இது தொடர்பாக தேசிய ஃபவுண்டரி மாநாட்டு நிகழ்ச்சிக்கான தலைவர் ஆர். சரவணன் கூறியதாவது :- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேசிய ஃபவுண்டரி மாநாட்டில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், இந்தியாவில் இருக்கும் முதன்மையான ஃபவுண்டரி ஆலைகளைச் சேர்ந்தவர்களே கலந்து கொள்வார்கள். சிறந்த பயிற்சி, புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் அனுபவங்களை பரிமாறுதல், தொழில்நுட்பம் மற்றும் ஃபவுண்டரி தொழிலில் இருக்கும் சமூக பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். 



தொழில் நகரமாக கோவை மாவட்டம் திகழ்வதற்கு ஃபவுண்டரி தொழில்களே காரணம். நாட்டிலேயே சுமார் 600-க்கும் மேற்பட்ட ஃபவுண்டரி யூனிட்டுகளை இங்கு கொண்டிருக்கிறது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்காக, எளிய முறையில் தொழில் செய்தல், முதலீடுகள் மற்றும் தயாரிப்பிற்கான அந்நிய முதலீட்டைப் பெறும் நடைமுறை தளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மேக் இன் இந்தியா திட்டத்தில் ஃபவுண்டரி தொழில் முக்கிய பங்காற்றும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த 5-7 சதவீத ஃபவுண்டரி தொழிலின் வளர்ச்சி, 13-14 சதவீதம் வரை எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

இந்த மாநாட்டின் நோக்கம் 'முன்னோக்கி செல்லுதல்' என்பதாகும். திட்டமிடுதல், இலாபநோக்கு, திறன் மேம்பாடு, ஆட்டோமெஷன் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் அனைத்து பொது விவகாரங்கள் பற்றியும், 2-வது நாளில் பாதுகாப்புத்துறை, ரயில்வேத்துறை, பொருட்களை கையாளுதல், திறன் மேம்பாடு, தொழில் 4.0 போன்றவை குறித்து விளக்கப்பட இருக்கிறது. அதோடு, இரும்பு காஸ்டிங், அலுமினிய காஸ்டிங்ஸ், மற்றும் எஃகு காஸ்டிங் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.



மேலும், 3டி பிரிண்டிங், டிஜிட்டல் ரேடியோகிராபி, வெல்டிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப முறைகள் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட 49 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...