அ.தி.மு.க.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில், அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கி கூறியிருந்தார். இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு, நாளை பிற்பகல் முதல் திரையிடப்படும் எனத் தெரிவித்தார்.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில், அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கி கூறியிருந்தார். இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு, நாளை பிற்பகல் முதல் திரையிடப்படும் எனத் தெரிவித்தார்.