'அமைதியான வழியே தளபதி விஜயின் வழி' : கோவை மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவர் சம்பத் பேட்டி

கோவை : சர்கார் படத்திற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைதியான வழியே தளபதி விஜயின் வழி என்றும், அதனையே தாங்கள் பின்பற்றுவதாக கோவை மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.


கோவை : சர்கார் படத்திற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைதியான வழியே தளபதி விஜயின் வழி என்றும், அதனையே தாங்கள் பின்பற்றுவதாக கோவை மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இயக்குநர் முருகதாஸை கைது செய்ய வேண்டும் என கோவையில் சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேனர்களை கிழித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் ரசிகர்மன்றத்தின் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார், சாந்தி திரையரங்கிற்கு சென்றார். அப்போது, விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் வாயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். 

பின்னர், திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது :- திரையரங்கம் முன்பாக அ.தி.மு.க.வினர் போட்டுச் சென்ற குப்பைகளை அகற்றவே இங்கு வந்தேன். பொதுமக்கள் யாரும் அச்சப்படாமல் திரையரங்கிற்கு வந்து சர்க்கார் படம் பார்க்கலாம். திரைப்படம் பார்க்க வருபவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. 

அ.தி.மு.க.,வினரின் இந்த செயலுக்கு எதிர்வினை என்பதெல்லாம் இல்லை. அமைதியான வழியே தளபதி விஜயின் வழி, அதையே பின்பற்றுகின்றோம். பொதுமக்கள் நலன் கருதியும், திரையரங்க சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேனர்களை அகற்ற முடிவு செய்துள்ளோம். தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும், என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...