கடுமையான காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் டெல்லி வாசிகள்

டெல்லி: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

டெல்லி: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் ரசாயனம் இல்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்றும் பெரும்பாலான பகுதிகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

காற்றின் தரம் குறித்த குறியீட்டு அளவு 100-க்குள் இருந்தால் மட்டுமே உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு 7:00 மணியளவில் இந்தக் குறியீடு 281-ஆக இருந்தது.

இது படிப்படியாக அதிகரித்து இரவு 10:00 மணிக்கு 296-ஆகவும், இன்று காலை 329-ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனந்த் விஹார், ஜஹாங்கிர்புரி, மயூர் விஹார், லஜ்புத் நகர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...