கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் சுமார் மூன்றிலிருந்து நான்கு பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

இந்த காய்ச்சலின் மரணங்கள் மறைக்கப்படும் அளவிற்கு சுகாதாரப் பணிகள் முறைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த முத்துகுமார் (42) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், இவர் எந்த காய்ச்சல் தொற்றி உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இதேபோல் மூளை காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்றைய நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 9 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 பேரும் 84 பேர் சாதாரண காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் சுமார் மூன்றிலிருந்து நான்கு பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

இந்த காய்ச்சலின் மரணங்கள் மறைக்கப்படும் அளவிற்கு சுகாதாரப் பணிகள் முறைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த முத்துகுமார் (42) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், இவர் எந்த காய்ச்சல் தொற்றி உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இதேபோல் மூளை காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்றைய நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 9 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 பேரும் 84 பேர் சாதாரண காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.