கோவை : கோவை மாநகரை போதைப் பொருட்கள் இல்லாத மாநகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை மாநகரை போதைப் பொருட்கள் இல்லாத மாநகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரின் புதிய காவல்துறை துணை ஆணையாளராக (சட்டம்& ஒழுங்கு) பொறுப்பேற்றுள்ள பாலாஜி சரவணன் நம்மிடம் கூறியதாவது :- தற்போது கோவையில் இளைஞர்களை அழிக்க பெருகி வரும் கஞ்சா, மயக்க ஊசிகள் போன்ற போதைப் பொருட்களை முழுமையாக அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க தேவையான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டப்படும்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதேபோல, காவலர்களும், பொதுமக்களும் நண்பர்களாக இணைந்து பணி செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவித்தார்.

கோவை மாநகரின் புதிய காவல்துறை துணை ஆணையாளராக (சட்டம்& ஒழுங்கு) பொறுப்பேற்றுள்ள பாலாஜி சரவணன் நம்மிடம் கூறியதாவது :- தற்போது கோவையில் இளைஞர்களை அழிக்க பெருகி வரும் கஞ்சா, மயக்க ஊசிகள் போன்ற போதைப் பொருட்களை முழுமையாக அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க தேவையான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டப்படும்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதேபோல, காவலர்களும், பொதுமக்களும் நண்பர்களாக இணைந்து பணி செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவித்தார்.