கோவை : கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
கோவை : கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அணிக்கொரை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (57). இவர் கடந்த ஐந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி கூறும் போது :- சந்திரசேகருக்கு 5 நாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அணிக்கொரை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (57). இவர் கடந்த ஐந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி கூறும் போது :- சந்திரசேகருக்கு 5 நாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்தார்.