கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் பகுதி பெரியார் நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் பகுதி பெரியார் நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சங்கனூர் பகுதி பெரியார் நகரில் ஓடையை ஒட்டி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவர்கள் வசித்து வரும் இடங்களை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது :- தாங்கள் அப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக செலுத்தி வரும் இவர்களுக்கு, மாற்று இடம் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கைகள் எடுக்காமல், வரும் 16-ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.