திருப்பூரில் தீபாவளியன்று கடந்தாண்டை விட கூடுதலாக மதுவிற்பனை : ரூ. 8.5 கோடிக்கு விற்பனையாகி அமோகம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி நாளில் அரசு மதுபானக்கடை மூலமாக ரூ. 8.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட ரூ. 61 லட்சம் கூடுலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி நாளில் அரசு மதுபானக்கடை மூலமாக ரூ. 8.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட ரூ. 61 லட்சம் கூடுலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலமாக இந்தியாவிற்கு அந்நிய செலாவணியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் மாவட்டமாக பெருமை பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் ஆண்டுதோறும் கடுமையாக உழைத்து ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி போனசாக கணிசமான தொகை பெற்று, தங்களது அத்தியாவசிய தேவைகளையும், குடும்பத்திற்கு தேவையான காரியங்களையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக ரூ. 350 கோடி மது விற்பனைக்கு இலக்கு வைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டிருந்தனர். 

இதன் காரணமாக, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 236 டாஸ்மாக் மதுபான கடைகளில், தீபாவளி தினமான நேற்று 8 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளியன்று விற்பனையான தொகையை விட 61 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அதிகம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...