நீலகிரியில் வட கிழக்கு பருவமழைக்கு அச்சம்; விவசாயிகள் அவசரகதியில் அறுவடை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிரிடப்பட்டு குறைந்த நாட்களே ஆன காய்கறிகளை விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிரிடப்பட்டு குறைந்த நாட்களே ஆன காய்கறிகளை விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.



வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.அதேபோல கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் நீலகிரியில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசியான நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உருளைக்கிழங்கு,பீன்ஸ் முட்டைகோஸ்,மேரக்காய்,பீட்ரூட், முள்ளங்கி போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.இங்கு விளையும் காய்கறிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கர்நாடகா,கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இப்படியிருக்க நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக காய்கறிகள் பரவலாக விளைச்சல் கண்டிருந்தாலும் இவைகள் இன்னும் முழு வளர்சியை அடையவில்லை.இவைகள் முழு வளர்ச்சி அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும்.ஆனால் அதற்குள் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஏற்படும் என்பதால்,காய்கறிகள் அழுகிவிட வாய்ப்புகள் உள்ளது.இதனால் தற்போது விளைந்துள்ள காய்கறிகளை விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.



அதேபோல இந்த காய்கறிகள் முழு வளர்ச்சி அடையாததால் சந்தைகளில் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. இருப்பினும் வேறுவழியின்றி விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...