நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறையின் காரணமாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறையின் காரணமாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான தொட்டபெட்டா, படகு இல்லம் பைக்காரா, படகு இல்லம், லேம்ஸ்ராக், டால்பி நோஸ், மலைரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையினை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களில் உள்ள இயற்கை காட்சியை காண்பதற்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் திரளுகின்றனர். குறிப்பாக, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் இன்று அதிக அளவில் காணப்பட்டனர். சில சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர்.

அதேவேளையில், சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலா தலங்களுக்கு வெளியே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் வாங்கி மகிழ்கின்றனர். இதனால், வியாபாரம் களைகட்டியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் நடைபாதை வியாபாரிகள், தொடர் விடுமுறை தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.