போதிய பேருந்து வசதியில்லாததால் அதிக கட்டணம் வசூலிப்பு : திருப்பூரில் தனியார் பேருந்துகள் மீது பயணிகள் புகார்

திருப்பூர் : போதிய பேருந்து வசதி இல்லாததால், தீபாவளிப் பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் : போதிய பேருந்து வசதி இல்லாததால், தீபாவளிப் பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. 



நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்றைய தினம் பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட துணிகள், இனிப்பு வகைகள், பட்டாசு போன்றவை வாங்குவதற்காக திருப்பூரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



மேலும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிகளவில் உள்ள நிலையில், திருப்பூரில் இருந்து சிதம்பரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான பேருந்து வசதிகளை அரசு செய்யவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...