சரவணம்பட்டி அருகே இரு வெவ்வேறு இடங்களில் மதுபோதை தகராற்றில் 2 பேர் கொலை

கோவை : சரவணம்பட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் மதுபோதையினால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சரவணம்பட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் மதுபோதையினால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கணபதி அடுத்த பதிகவுண்டர் தோட்டம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையில் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர், கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் என்றும், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவின் குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, கணபதி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிசா மாநில தொழிலாளர்களிடையே நேற்று இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சச்சின் (30) என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேரை பிடித்துள்ளனர். அதேபோல, சரவணம்பட்டி போலீசார் இரண்டு கொலைகள் தொடர்பாக அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...