சிங்காநல்லூர் குளத்தில் மருத்துவ தாவரங்களை விதைத்த பொதுமக்கள்

கோவை : சிங்காநல்லூர் குளத்தில் இயற்கைச் சூழலை உருவாக்கும் விதமாக, மருத்துவ தாவரங்களை விதைக்கும் பணியில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கோவை : சிங்காநல்லூர் குளத்தில் இயற்கைச் சூழலை உருவாக்கும் விதமாக, மருத்துவ தாவரங்களை விதைக்கும் பணியில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கிய முதல்நாள் பணியின் போது, ஈரமான நிலத்திற்கு ஏற்றவாறு, மருத்துவ தாவரங்களை எவ்வாறு நடவு செய்வது என்பது பற்றி வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானி குன்ஹிகண்ணன் விளக்கிக் கூறினார். சுமார் 2 மணி நடைபெற்ற இந்த விளக்க நிகழ்ச்சியின் போது, 75 வகையான மருத்துவ தாவரங்கள் மற்றும் அதன் குணங்கள் பற்றி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அறிந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் முதல் மற்றும் 3-வது ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை மாநகராட்சி மற்றும் நகர பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,” இயற்கைச் சூழலை உருவாக்கும் வாய்ப்பின் மூலம் பொதுமக்களுக்கும், இயற்கைக்கும் இடையே ஒரு நல்ல தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நகர்ப் பகுதிகளில் இருக்கும் பல்லுயிர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இந்த ஒரு கி.மீ. இயற்கைச் சூழலை அமைக்கும் பணியின் போது, விதவிதமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் இந்த குளத்தை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அவர்களால் காண முடிகிறது,”என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பினால், தொடர்புக்கு : கலைவாணி - 9585888583

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...