பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தில் அழகான கோவையை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் : கோவை மாநகராட்சி

கோவை : பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தில் அழகான கோவையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை : பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தில் அழகான கோவையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசால் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் வகையில், தங்களது வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவலைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை எடுத்து வர, துருப்பிடிக்காத எவர்சில்வர் பாத்திரங்கள், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்கு மட்டைகள், துணிப்பைகள், சணல்பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளாஸ்டிக் இல்லா ஆசார தமிழகத்தில், அழகான கோவையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுப்போம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...