கோவை : கணபதியை அடுத்த விநாயகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
கோவை : கணபதியை அடுத்த விநாயகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இவர் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்த திருமண மண்டப கட்டிட பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று மாலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அதில், பணியில் இருந்த 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், மீதமுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இவர் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்த திருமண மண்டப கட்டிட பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று மாலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அதில், பணியில் இருந்த 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், மீதமுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.