திருப்பூர் : திருப்பூரில் பெட்ரோல் திருடியதைக் கண்டித்த நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் : திருப்பூரில் பெட்ரோல் திருடியதைக் கண்டித்த நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் சுடுகாட்டு தோட்டத்தில் குடியிருந்து வரும் ரமேஷ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர் மணியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. ரமேஷ் அந்தப் பகுதியில் எலக்ட்ரிஷியனாக வேலை பாரத்து வந்த நிலையில், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடிய மணியைக் கண்டித்துள்ளார். பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மணி ரமேஷை தீர்த்துக் கட்ட முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, ரமேஷை மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து மது போதையில் இருந்த ரமேஷை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதின், குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.