கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பிரபல யானை வேட்டைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பிரபல யானை வேட்டைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, போளுவாம்பட்டி மற்றும் கோத்தகிரி வனப்பகுதிகளில் தந்ததிற்காக ஆண் காட்டு யானைகள் சுட்டு வேட்டையாடப்படுகின்றன. இந்த யானை வேட்டை தொடர்பாக பிரபல யானை வேட்டைகாரனான குபேந்திரன் (47) மற்றும் அவரது கூட்டாளியான சிங்கம் (46) ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கேரள வனத்துறையினரும் இவர்களை தேடி வரும் நிலையில், கோத்தகிரி வனத்துறையினர் கேரளாவில் பதுங்கியிருந்த குபேந்திரன் மற்றும் சிங்கம் ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இவ்வழக்கில் பிணையாணை பெற்ற நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு யானையை சுட்டுக்கொன்ற வழக்கின் கீழ் சிறுமுகை வனத்துறையினர் மீண்டும் இவர்களை கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிமன்ற உத்திரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குபேந்திரன் மற்றும் சிங்கம் குறித்து வனத்துறையினர் கூறும் போது, “இவர்கள் ஆண் யானையினை மட்டுமே தந்ததிற்காக சுட்டுக்கொன்று வேட்டையாடுவார்கள். துப்பாக்கிகளை வனப்பகுதியில் ஆங்காங்கே புதைத்து மறைத்து வைத்து விட்டு யானைகளை கொன்று அதன் தந்தங்களை கேரளாவில் உள்ள வியாபாரி பாபு ஜோஸ் என்பவரிடம் கொடுத்து விற்றுவிடுவார்கள். ஒரே துப்பாக்கி குண்டில் யானையினை வீழ்த்தக்கூடிய குபேரனை தமிழகம் மற்றும் கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்,” என்றனர்.
யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, போளுவாம்பட்டி மற்றும் கோத்தகிரி வனப்பகுதிகளில் தந்ததிற்காக ஆண் காட்டு யானைகள் சுட்டு வேட்டையாடப்படுகின்றன. இந்த யானை வேட்டை தொடர்பாக பிரபல யானை வேட்டைகாரனான குபேந்திரன் (47) மற்றும் அவரது கூட்டாளியான சிங்கம் (46) ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கேரள வனத்துறையினரும் இவர்களை தேடி வரும் நிலையில், கோத்தகிரி வனத்துறையினர் கேரளாவில் பதுங்கியிருந்த குபேந்திரன் மற்றும் சிங்கம் ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இவ்வழக்கில் பிணையாணை பெற்ற நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு யானையை சுட்டுக்கொன்ற வழக்கின் கீழ் சிறுமுகை வனத்துறையினர் மீண்டும் இவர்களை கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிமன்ற உத்திரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குபேந்திரன் மற்றும் சிங்கம் குறித்து வனத்துறையினர் கூறும் போது, “இவர்கள் ஆண் யானையினை மட்டுமே தந்ததிற்காக சுட்டுக்கொன்று வேட்டையாடுவார்கள். துப்பாக்கிகளை வனப்பகுதியில் ஆங்காங்கே புதைத்து மறைத்து வைத்து விட்டு யானைகளை கொன்று அதன் தந்தங்களை கேரளாவில் உள்ள வியாபாரி பாபு ஜோஸ் என்பவரிடம் கொடுத்து விற்றுவிடுவார்கள். ஒரே துப்பாக்கி குண்டில் யானையினை வீழ்த்தக்கூடிய குபேரனை தமிழகம் மற்றும் கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்,” என்றனர்.