திருப்பூர் : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள 4 வயது சிறுமி நேற்றைய தினம் மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, காலை 5 மணியளவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மாலை வரை சிகிச்சை அளிக்காமல் கால தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சியினரும் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகாரளித்த பின்பே, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் உள்பட அனைத்து சங்கத்தினர் சார்பிலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மாவட்ட மருத்துவ இணை இயக்குனரிடம் மனு அளித்தனர். மேலும், அனைத்திந்திய மாதர் சங்கம், தேசிய மாதர் சங்க சம்மேளனம் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையையும், அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள 4 வயது சிறுமி நேற்றைய தினம் மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, காலை 5 மணியளவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மாலை வரை சிகிச்சை அளிக்காமல் கால தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சியினரும் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகாரளித்த பின்பே, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் உள்பட அனைத்து சங்கத்தினர் சார்பிலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மாவட்ட மருத்துவ இணை இயக்குனரிடம் மனு அளித்தனர். மேலும், அனைத்திந்திய மாதர் சங்கம், தேசிய மாதர் சங்க சம்மேளனம் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையையும், அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.