நீலகிரி : குன்னூர் லெவல் கிராசிங்கில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை அ.தி.மு.க.,வின் மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் மிரட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : குன்னூர் லெவல் கிராசிங்கில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை அ.தி.மு.க.,வின் மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் மிரட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் லெவல் கிராசிங்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணனின் காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், கோபமடைந்த எம்.பி., காவல்துறையினரை தொலைத்துவிடுவேன் எனவும் தகாத வார்த்தைகளாலும் மிரட்டியுள்ளார். இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த போலீசார், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். சட்டத்திற்குட்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை மக்களவை உறுப்பினர் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் லெவல் கிராசிங்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணனின் காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், கோபமடைந்த எம்.பி., காவல்துறையினரை தொலைத்துவிடுவேன் எனவும் தகாத வார்த்தைகளாலும் மிரட்டியுள்ளார். இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த போலீசார், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். சட்டத்திற்குட்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை மக்களவை உறுப்பினர் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.