கோவை : தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை : தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மாவட்டத்திற்கு தலா ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகளாக மாற்றும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, கோவை மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக அசோகபுரம் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. விரைவில் பணிகள் முடிவுபெற்று கோவை மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்," இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் உயர்தர வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், சி.சி.டி.வி. வசதி, சோலார் விளக்குகள், மைதானங்கள், ஃபபர் பெஞ்சுகள், ஊட்டச்சத்து வளர்ச்சிக்கான வசதிகள் உள்ளிட்டவை சுமார் ரூ. 26 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்காக, மாநில அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது நிதிகளை ஒதுக்க வேண்டும்," எனக் கூறினார்.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மாவட்டத்திற்கு தலா ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகளாக மாற்றும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, கோவை மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக அசோகபுரம் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. விரைவில் பணிகள் முடிவுபெற்று கோவை மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்," இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் உயர்தர வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், சி.சி.டி.வி. வசதி, சோலார் விளக்குகள், மைதானங்கள், ஃபபர் பெஞ்சுகள், ஊட்டச்சத்து வளர்ச்சிக்கான வசதிகள் உள்ளிட்டவை சுமார் ரூ. 26 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்காக, மாநில அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது நிதிகளை ஒதுக்க வேண்டும்," எனக் கூறினார்.