கோவை : திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் வெஸ்டன்காட்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில் இன்று டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை : திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் வெஸ்டன்காட்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில் இன்று டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளித் தலைவர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் அழகு ராஜலட்சுமி கலந்து கொண்டார். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த அனைத்து தகவல்களையும், மருத்துவர் அழகு ராஜலட்சுமி மாணாக்கரிடம் விளக்கிக் கூறினார். மேலும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகளையும், தவிர்க்கும் வழிமுறைகளையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மாணாக்கர் நோய்கள் இன்றி சுகாதாரமாக வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவர் அழகு ராஜலட்சுமி பரிசளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்த சுகாதார துறை அதிகாரிகளும் முகாமில் கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைவர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் அழகு ராஜலட்சுமி கலந்து கொண்டார். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த அனைத்து தகவல்களையும், மருத்துவர் அழகு ராஜலட்சுமி மாணாக்கரிடம் விளக்கிக் கூறினார். மேலும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகளையும், தவிர்க்கும் வழிமுறைகளையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மாணாக்கர் நோய்கள் இன்றி சுகாதாரமாக வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவர் அழகு ராஜலட்சுமி பரிசளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்த சுகாதார துறை அதிகாரிகளும் முகாமில் கலந்து கொண்டனர்.