கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச ஆடைகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச ஆடைகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் (யுவா) சார்பில் இலவச ஆடைகள் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இவ்வமைப்பினர் தீபாவளி பண்டிகைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக துணிகள் வழங்குவதை தொடங்கியுள்ளனர். இந்த மையம் வருடம் முழுவதும் செயல்படும் எனவும், ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்த அமைப்பின் சார்பாக உள்நோயாளிகளுக்கு சானிட்டரி நாப்கின் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ்வமைப்பினர் தற்போது தீபாவளிக்கு ஏழை எளிய நோயாளிகளுக்குப் புத்தம் புதிய ஆடைகள் வழங்க முடிவெடுத்திருப்பது நோயாளிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் தொடங்கி வைத்தார். இதில், மருத்துவமனையின் முதல்வர் அசோகன், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
