கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதில் வெள்ளலூரை சேர்ந்த நாகராஜ் என்ற 62 வயது முதியவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த சுங்கம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போல காய்ச்சல் காரணமாக நேற்றுமுன் தினம் அனுமதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த நாகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...