குழந்தைகளின் பள்ளி தேர்வு முடியும் வரை தற்போது வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி வேண்டும் - உக்கடம் பகுதி மக்கள் மனு

கோவை: உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை : உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உக்கடம் ஸ்லாட்டர் ஹவுஸ் அருகில் கருமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "இப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் அருகே உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். எங்களுக்கு தற்போது மலுமிச்சம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் போக்குவரத்து சிரமம் உள்ளதால், முழு ஆண்டு தேர்வு வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...