எதிர்வாதம் நடத்த வரும் 15-ம் தேதிக்கு மேல் சி.பி.ஐ.,க்கு கால அவகாசம் வழங்க முடியாது : விஷ்ணு பிரியா வழக்கில் கோவை நீதிமன்றம் திட்டவட்டம்

கோவை : டி.எஸ்.பி விஷ்ணுபிரியா உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு எதிராக, விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட ஆட்சேபனை மனு மீது எதிர்வாதம் நடத்த, வருகின்ற 15-ம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை : டி.எஸ்.பி விஷ்ணுபிரியா உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு எதிராக, விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட ஆட்சேபனை மனு மீது எதிர்வாதம் நடத்த, வருகின்ற 15-ம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்த வழக்கில் யாரும் குற்றவாளிகள் இல்லை எனவும், இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். மேலும், விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், நீதிமன்றம் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் சந்திரகலா, துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட 7 பேரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் இந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தாமல், சி.பி.ஐ விசாரணையை முடித்துள்ளது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், சி.பி.ஐ தரப்பில் எதிர்வாதம் செய்ய வேண்டிய நிலையில், அந்த தரப்பு அவகாசம் கோரியது. தொடர்ந்து, வருகின்ற 15-ம் தேதி எதிர்வாதம் நடத்த உத்தரவிட்ட நீதிபதி நடராசன், அதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...