திருப்பூர்: திருப்பூரில் வயதான தம்பதியை நகை பணத்திற்காக கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்திலிருந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் வயதான தம்பதியை நகை பணத்திற்காக கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்திலிருந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் பகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்த வயதான தம்பதிகளான முத்துக்குமாரசாமி மற்றும் தெய்வாத்தாள் ஆகியோரை கொலை செய்து அவர்களிடமிருந்த 6 பவுன் தாலிச்செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வயதான தம்பதிகளின் வீட்டருகே வசித்து வந்த சித்திரை ராஜா என்பவர், அந்த தம்பதியினரிடம் பணம், நகை இருப்பதாக அறிந்து, தனது நண்பரான சுயம்புலிங்கத்திற்கு தகவல் அளித்து இருவரும் சேர்ந்து அவர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் கொலைக்கு பின் தப்பியோடிய அவர்களை அவிநாசிபாளையம் காவல்துறையினர் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுயம்புலிங்கம் மீது ஏற்கனவே காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் பகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்த வயதான தம்பதிகளான முத்துக்குமாரசாமி மற்றும் தெய்வாத்தாள் ஆகியோரை கொலை செய்து அவர்களிடமிருந்த 6 பவுன் தாலிச்செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வயதான தம்பதிகளின் வீட்டருகே வசித்து வந்த சித்திரை ராஜா என்பவர், அந்த தம்பதியினரிடம் பணம், நகை இருப்பதாக அறிந்து, தனது நண்பரான சுயம்புலிங்கத்திற்கு தகவல் அளித்து இருவரும் சேர்ந்து அவர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் கொலைக்கு பின் தப்பியோடிய அவர்களை அவிநாசிபாளையம் காவல்துறையினர் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுயம்புலிங்கம் மீது ஏற்கனவே காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
