நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் சற்று அதிகமாகவும், உதகை மற்றும் கோத்தகிரியில் மிதமாகவும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுவதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது அறையிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 73.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் சற்று அதிகமாகவும், உதகை மற்றும் கோத்தகிரியில் மிதமாகவும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுவதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது அறையிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 73.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
