சேலம் ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பயணிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம்

கோவை : சேலம் ரயில்வே கோட்டத்தின் 20-வது ரயில்வே பயணிகளுக்கான ஆலோசனைக் குழு (டி.ஆர்.யூ.யூ.சி.சி) கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை : சேலம் ரயில்வே கோட்டத்தின் 20-வது ரயில்வே பயணிகளுக்கான ஆலோசனைக் குழு (டி.ஆர்.யூ.யூ.சி.சி) கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் கலந்து கொண்டு பேசினார். ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் வரவேற்றார். கோட்டசெயல் பிரிவு மேலாளர் பூபதி ராஜா நன்றி கூறினார். சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளும், அதன் முன்னேற்றங்கள் குறித்து கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், பாதுகாப்பு, நேரம் தவறாமை மற்றும் ரயில்களில் தூய்மை, ரயில் பெட்டிகளில் தூய்மை உள்ளிட்டவை குறித்தும், கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.



மகளிர் பாதுகாப்பு, ஓய்வறைகளில் உள்ள வசதிகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் குறித்தும், ரயில்வே நடைமேம்பாலம், சி.சி.டி.வி. கேமிரா வசதி, ரயில் வருகை, புறப்பாடு குறித்த டிஜிட்டல் பலகை, ரயில் நிறுத்த இடம், கழிப்பறை வசதி, மருந்துக் கடைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை குழு உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நீலகிரி தொழில் வர்த்தக சபையின் ரோகித் கே.ஜெயின், மேட்டுப்பாளையம் வணிகர் சங்க அமைப்பினர் பி.ராஜேந்திரன், திருப்பூர் தொழில் வர்த்தக சபை நிர்வாகி ஆர்.கே.கே.எம்.சபாபதி, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி பி.வெங்கட்ராகவன் (கரூர்), ஜி.இளங்கவி (ஈரோடு), ஈரோடு ரோட்டரி கிளப் நிர்வாகி சி.எஸ்.கெளதமன், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் நிர்வாகி பி.அத்தியண்ணா, கோவை மாவட்ட ரயில்வே மற்றும் விமான பயணிகள் நலசங்கத்தின் நிர்வாகி ஆர்.சண்முகம், கிருஷ்ணகிரி எம்.பி. கே.அசோக்குமார் சார்பில் கே.பி.காத்தவராயன், கரூர் தொகுதி எம்.பி. தம்பிதுரை சார்பில் திருவிகா, திருப்பூர் எம்.பி. சத்யபாமா சார்பில் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...