நீலகிரி : உதகையில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளியை உளவுபிரிவு போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி : உதகையில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளியை உளவுபிரிவு போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 26-ம் தேதி பில்லூர் அணை அருகே கூட்டாக விவசாயம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி என்பவர் சக விவசாயி தங்கராஜை ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவானர். இதில், படுகாயம் அடைந்த விவசாயி தங்கராஜ் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான விவசாயி பொன்னுசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், அவர் இன்று குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது, அங்கிருந்த உளவுபிரிவு காவலர்கள் பொன்னுசாமியை குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர். நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.