கேரளாவில் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமனம்

கேரளா : தேவஸ்தான வரலாற்றில் கேரளாவில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா : தேவஸ்தான வரலாற்றில் கேரளாவில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிராமணரல்லாதோர் அர்ச்சகராக முடியாது என்ற விதியைத் தளர்த்தி கேரளாவில் தற்போது, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் சூழல் நிலவி வருகிறது. அண்மையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் சார்பில் பட்டிலினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட பிரமாணரல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். 

அந்த வகையில், பிரமாணர் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க கேரளா தேர்வாணையம் சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி அடைந்த 54 பேருக்கு அர்ச்சகர் பணி கிடைத்துள்ளது. இவர்களைக் கொச்சி தேவஸ்தானம், அர்ச்சகர்களாக நியமித்துள்ளது. கொச்சி தேவஸ்தான வரலாற்றில் பிராமணர் அல்லாதோர், அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இவர்கள் அனைவரையும் தந்திரிகள், தந்திரி சமாஜம், தந்திரி மண்டலம் ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தி இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். 

இது தொடர்பாக தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "ஓ.எம்.ஆர் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் தான் 54 பேரும் அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றபடி, இதில் எவ்வித முறைகேடு நடைபெறவில்லை. மெரிட் லிஸ்டில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், 16 பேர் பிராமணர்கள். தேர்வு செய்யப்பட்ட 54 பேரில், 34 பேர் ஈழவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தேவரா சமூகத்தையும், இருவர் விஸ்வகர்மா சமூகத்தையும், ஒருவர் இந்து நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர்,” என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...