பல்லடம் அருகே சரக்கு லாரி மீது பொக்லைன் இயந்திரம் மோதி விபத்து : சாலையில் சக்கரங்கள் ஓடியதால் பரபரப்பு

திருப்பூர் : கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் து. லாரியின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் து. லாரியின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரணம்பேட்டை பகுதியில் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே ஒருவழிச்சாலையில் வந்த பொக்லைன் இயந்திரம் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சரக்கு லாரியின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் தனியாக ஓடின. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்ததுடன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...