கோத்தகிரியில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

கரூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கோத்தகிரியை சேர்ந்த லோகேஸ்வரி என திருமணம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார். தற்போது, ராஜேஷ்குமார் சவுதியில் பணி புரிந்து வருகிறார். இதனால், லோகேஸ்வரியும், மகன் கார்த்திகேயனும் கோத்தகிரியில் உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் லோகேஸ்வரியின் பெற்றோர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.



இந்த நிலையில், இரவு லோகேஸ்வரியை பார்க்க அவரது பெற்றோர் வந்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருப்பதைக் கண்ட அவர்கள் சந்தேகமடைந்து பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது, லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், பேரன் கார்த்திகேயன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



பின்னர், இதுகுறித்து உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோத்தகிரி போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியாவின் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...