விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாருடனான சர்ச்சை பேச்சு : கோவையில் எச்.ராஜா விளக்கம்

கோவை : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரம் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா கோவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரம் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா கோவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதாகக் கூறி இந்துகளுக்கு எதிரான யுத்தத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து இருக்கின்றார். கேரளாவில் சிரியன் சர்ச் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை இதுவரை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மசூதிகளில் கூம்பு வடிவ ஆம்ளிஃபயர் வைக்கக் கூடாது என்று தீர்ப்பு இருந்தும், அதை அமல்படுத்தவில்லை. பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதலமைச்சராக கேரளாவில் இருப்பார். பாரத தேசத்தில் அர்பன் நக்சல் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

பாலின சமத்துவம் பேசி ஐயப்பன் கோவிலை கண்காட்சி மையமாக மாற்ற கேரள அரசு முயல்கின்றது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா, 18 ஆண்களோடு ப்ளு பிலிம்மில் நடித்தவர். கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களை பக்தர்கள் எனக் கூறி நுழைய வைக்கப் பார்க்கின்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சசிதரூர் தனிப்பட்ட முறையில் நாகரிகமில்லாத நபர். அவர் பிரதமர் மோடியைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதைக் கண்டிக்கின்றேன். 

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா இந்து மதம் மாறியதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். அவரை இஸ்லாம் மதத்தில் இருந்து மத தலைவர்களே நீக்கி அறிக்கைவிட்டு இருக்கின்றனர். அதுபோல, சபரிமலை வழக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கு என்ற தவறான தகவலை பினராயி விஜயன் சொல்லி வருகின்றார். பா.ஜ.க. எப்போதும் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்கின்றது.  நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால்தான் ஊழலை தடுக்க முடியும். வரும் மார்ச் மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கின்றது. 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது உயர்நீதிமன்றம் குறித்து போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரத்தில், அது என்னுடைய குரல் இல்லை என எங்கும் சொல்லவே இல்லை. குரல் எடிட் செய்யப்பட்டது என்று மட்டுமே சொன்னேன். காவல்துறை அதை எடிட் பண்ணியிருக்கலாம். காவல்துறைதான் வீடியோ பதிவு செய்தது. 

ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது ராமர் கோவில் விவகாரம் பேசப்படுகிறது என்பது தவறு. நீதித்துறையில் ஏற்படும் காலதாமதம்  காரணமாகவே தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பேசப்பட்டாலும், அதற்கு இந்துக்கள் காரணமல்ல, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...