நீலகிரி: கோத்தகிரி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சப்பட வைத்துள்ளது.
நீலகிரி: கோத்தகிரி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியை சேர்ந்த ரபீக் (40) என்பவர் மளிகை மற்றும் செல்போன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கெடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோத்தகிரி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.