கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் என்பதால் இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருத்து சொல்லலாம்.
தமிழகத்தில் பா.ஜ.க பலவீனமாக உள்ளது. அகில இந்திய அளவிலும் பா.ஜ.க பலவீனமாக உள்ளதால் கூட்டணி கட்சிகளும் விலகி வருகின்றன.
பா.ஜ.க.,விற்கு மாற்று காங்கிரஸ் என்பதைப் போல், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் தான். அவர் தான் பிரதமர் வேட்பாளர்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
18 தொகுதிகளில் உள்ள 40 லட்சம் வாக்காளர்களுக்கு இப்போது சட்டமன்ற உறுப்பினர் கிடையாது.
ஆகவே, பதவி இழந்தவர்கள் தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.
18 பேரும் மேல் முறையீடு செய்ய போவதால் அங்கு தேர்தல் வர வாய்ப்பில்லை.
முதலமைச்சர் 7,000 கோப்புகளில் கையெழுத்து போடுவதால் 7 கோடி மக்களுக்கும் என்ன நன்மை?
வேலை இல்லாமல் இருந்த 1 கோடி பேரில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? எவ்வளவு முதலீடு வந்தது? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது? மக்களின் தரம் உயர்ந்துள்ளதா? அடிப்படை வசதிகள் மேம்பட்டதா? என பார்க்க வேண்டும்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.க.,விற்கும் உள்ள தொடர்பை மறைப்பதற்கு தி.மு.க.,வுடன் பா.ஜ,க இணக்கம் என விதண்டாவாதமான பதிலை தம்பிதுரை கூறி வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் என்பதால் இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருத்து சொல்லலாம்.
தமிழகத்தில் பா.ஜ.க பலவீனமாக உள்ளது. அகில இந்திய அளவிலும் பா.ஜ.க பலவீனமாக உள்ளதால் கூட்டணி கட்சிகளும் விலகி வருகின்றன.
பா.ஜ.க.,விற்கு மாற்று காங்கிரஸ் என்பதைப் போல், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் தான். அவர் தான் பிரதமர் வேட்பாளர்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
18 தொகுதிகளில் உள்ள 40 லட்சம் வாக்காளர்களுக்கு இப்போது சட்டமன்ற உறுப்பினர் கிடையாது.
ஆகவே, பதவி இழந்தவர்கள் தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.
18 பேரும் மேல் முறையீடு செய்ய போவதால் அங்கு தேர்தல் வர வாய்ப்பில்லை.
முதலமைச்சர் 7,000 கோப்புகளில் கையெழுத்து போடுவதால் 7 கோடி மக்களுக்கும் என்ன நன்மை?
வேலை இல்லாமல் இருந்த 1 கோடி பேரில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? எவ்வளவு முதலீடு வந்தது? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது? மக்களின் தரம் உயர்ந்துள்ளதா? அடிப்படை வசதிகள் மேம்பட்டதா? என பார்க்க வேண்டும்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.க.,விற்கும் உள்ள தொடர்பை மறைப்பதற்கு தி.மு.க.,வுடன் பா.ஜ,க இணக்கம் என விதண்டாவாதமான பதிலை தம்பிதுரை கூறி வருகிறார்.