கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் தங்கி செல்லும் வகையிலான 3 விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் தங்கி செல்லும் வகையிலான 3 விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் ஜெட் ஏர்வெஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் தங்கி செல்லும் வகையிலான சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், தினந்தோறும் 3,000 பேர் பயணிக்க முடியும். மேலும், பயணத்தில் சில சலுகைகளையும் பெறும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைத்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 05.30 மணிக்கும், சென்னைக்கு 07.00 மணிக்கும், டெல்லிக்கு 05.50 மணிக்கும், ஐதராபத்திற்கு பிற்பகல் 02.25 மணிக்கும், மும்பைக்கு 09.10 மணி, பிற்பகல் 02.25 மணி, இரவு 08.45, புனேவிற்கு பிற்பகல் 02.40 மணிக்கும் இயக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விமானப் பயணிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் ஜெட் ஏர்வெஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் தங்கி செல்லும் வகையிலான சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், தினந்தோறும் 3,000 பேர் பயணிக்க முடியும். மேலும், பயணத்தில் சில சலுகைகளையும் பெறும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைத்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 05.30 மணிக்கும், சென்னைக்கு 07.00 மணிக்கும், டெல்லிக்கு 05.50 மணிக்கும், ஐதராபத்திற்கு பிற்பகல் 02.25 மணிக்கும், மும்பைக்கு 09.10 மணி, பிற்பகல் 02.25 மணி, இரவு 08.45, புனேவிற்கு பிற்பகல் 02.40 மணிக்கும் இயக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விமானப் பயணிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.