திருப்பூர் : திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமரன் மகளிர் கல்லூரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் : திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமரன் மகளிர் கல்லூரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர், மங்கலம் சாலையில் குமரன் மகளிர் கல்லூரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் வில்வசேகர், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிளிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர், அனைவரும் கலந்து ஆலோசித்து கல்லூரியின் தேவைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில், கல்லூரிக்கு தேவையான கணினி ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், அனைத்தும் வகுப்புகளிலும் இ-வகுப்பறைகளுக்காக எல்.சி.டி. போன்றவை ரூ. 2 கோடி செலவில் செய்து தர கல்லூரி சார்பாக வலியுறுத்தப்பட்டது. அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு விரைந்து முடித்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.
திருப்பூர், மங்கலம் சாலையில் குமரன் மகளிர் கல்லூரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் வில்வசேகர், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிளிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர், அனைவரும் கலந்து ஆலோசித்து கல்லூரியின் தேவைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில், கல்லூரிக்கு தேவையான கணினி ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், அனைத்தும் வகுப்புகளிலும் இ-வகுப்பறைகளுக்காக எல்.சி.டி. போன்றவை ரூ. 2 கோடி செலவில் செய்து தர கல்லூரி சார்பாக வலியுறுத்தப்பட்டது. அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு விரைந்து முடித்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.