இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திரிபால் சிறீசேனா அதிபராகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இன்று திடீரென பிளவு ஏற்பட்டது.
இதனை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திரிபால் சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.
இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திரிபால் சிறீசேனா அதிபராகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இன்று திடீரென பிளவு ஏற்பட்டது.
இதனை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திரிபால் சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.
இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.