திருப்பூர் : திருப்பூரை அடுத்த நல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
திருப்பூர் : திருப்பூரை அடுத்த நல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

தொடர்ந்து பிரபல முன்னணி தொலைக்காட்சிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதோடு, மூக்கில் 2 இன்ச் டிரில் மெசின் வைத்து இயக்கியும் சாதனை படைத்தார். 22.5 கிலோ வரை நகத்தால் தூக்கி உலகிலேயே நகத்தின் பலம் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளரானார்.

ஆனால், இன்று திடீரென நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டு 11 மாதங்களே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, குடும்ப பிரச்சனையா? அல்லது கடன் தொல்லையா? என நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்ந்து பிரபல முன்னணி தொலைக்காட்சிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதோடு, மூக்கில் 2 இன்ச் டிரில் மெசின் வைத்து இயக்கியும் சாதனை படைத்தார். 22.5 கிலோ வரை நகத்தால் தூக்கி உலகிலேயே நகத்தின் பலம் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளரானார்.

ஆனால், இன்று திடீரென நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டு 11 மாதங்களே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, குடும்ப பிரச்சனையா? அல்லது கடன் தொல்லையா? என நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
