கோவை : போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வௌவால்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை : போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வௌவால்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசிபுரம் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர்கள் ஏர் துப்பாக்கிகளை பயன்படுத்தி வௌவால்களை வேட்டையாடியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஈரோட்டைச் சேர்ந்த எஸ். சுரேஷ் குமார் (33), சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த பி. சசிகுமார் (44), மற்றும் வெள்ளலூரைச் சேர்ந்த பி. ஜெயபிரகாஷ் (41) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏர் துப்பாக்கிகள், சமைத்த வௌவால் இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.